Monday, January 18, 2010

உதிர்ந்த பூக்களின் ஸ்பரிசத்தில்
எனது மௌனம்
நகர்கிறது..
உனக்கான எதிர்பார்த்தலில் ..
நகரும் காற்றில்
கழியும் பொழுதில் ...
நீயும் நானும்
பேசிக்கொண்ட வார்த்தைகளின்
பதிவுகளில்.. லயித்து கிடக்கிறது
உதிர்ந்த மலரும்.. கழிந்த பொழுதுமாக .. !
மெதுவாகவே வா.. அதனை சலனப்படுத்தா..
மௌனம் சுமந்து..!
தேடும் மொழியை
உன்னில் கண்டதாலே
நிஜத்தின் வலியை
உணரா மௌனத்தில்..
காத்திருப்பு..!
மனதின் உள்ளே
பனித்துளியின்
சிலிர்ப்பு..
நினைவின் தேரோட்டம்
அரங்கேற்றமாகும்..!
வரவின் நிச்சயமற்ற
பொழுதின்
காத்திருப்பில்
இன்னும்..
விழித்திருக்கும்..
என்றோ நீ
சொல்லிவிட்டு போன..
வார்த்தைகளின் எதிர்பார்ப்பில்..!
முடிவே அறியா..
பயணமாய்..
இதுவும் சுகமாய்..
என்னுள்ளும்..
எனக்காகவே..
நான் அறிந்த
உனக்குமாய்..!
- பொன்னியின் செல்வன்..!